
நேற்று வரை எனதென்று
நான் நினைத்த சூழல்
காலத்தோடு கலைந்துப் போனதை
என் புலன் தட்டி உணர்த்தின
சுவேச்சையாய் காலடி பதித்த இடங்களில்
தயக்க கோலமிட்ட என் கால் விரல்கள்...
தரையில் புரண்டெழுந்து நடை பழகிய
என் வீட்டு புழக்கடையும்,
காற்றை விட சுதந்திரமாய் பறந்து திரிந்த
பரந்த முற்றமும்,
படையலுக்காய் காத்திருக்கும் பண்டங்களை
பாட்டியின் கண்படாமல்
திருட்டு ருசி பார்த்த
இருட்டு சமையலறையும்,
களைத்த பின் கண்ணயர
இன்னொரு தாய் மடியாய்
ஒய்யாரமாய் நடுகூடத்தில்
காற்றோடு நடனமாடும்
அழகிய ஊஞ்சலும்,
இன்னும்
அதிகாலை பூபாளமாய்
குருவியின் செல்ல கூச்சலும்,
சாப்பிடும் நேரமறிந்து
தவறாமல் வந்து நிற்கும்
காகமும்,
எந்நேரமும் பின்பாட்டாய்
ஒலிக்கும் ரயில் சத்தமும்
இவை போல் பலவும் அடங்கியுள்ள
என் வீடு
இனி எனதல்ல
என் தாய் வீடு..
ஆயினும் மழைக் காலத்து காளான்களாய்
அங்கங்கே முளைத்து விட்டுருக்கின்றன
நான் இங்கே வாழ்ந்ததற்கான
என் அடையாளங்கள்..
நான் நினைத்த சூழல்
காலத்தோடு கலைந்துப் போனதை
என் புலன் தட்டி உணர்த்தின
சுவேச்சையாய் காலடி பதித்த இடங்களில்
தயக்க கோலமிட்ட என் கால் விரல்கள்...
தரையில் புரண்டெழுந்து நடை பழகிய
என் வீட்டு புழக்கடையும்,
காற்றை விட சுதந்திரமாய் பறந்து திரிந்த
பரந்த முற்றமும்,
படையலுக்காய் காத்திருக்கும் பண்டங்களை
பாட்டியின் கண்படாமல்
திருட்டு ருசி பார்த்த
இருட்டு சமையலறையும்,
களைத்த பின் கண்ணயர
இன்னொரு தாய் மடியாய்
ஒய்யாரமாய் நடுகூடத்தில்
காற்றோடு நடனமாடும்
அழகிய ஊஞ்சலும்,
இன்னும்
அதிகாலை பூபாளமாய்
குருவியின் செல்ல கூச்சலும்,
சாப்பிடும் நேரமறிந்து
தவறாமல் வந்து நிற்கும்
காகமும்,
எந்நேரமும் பின்பாட்டாய்
ஒலிக்கும் ரயில் சத்தமும்
இவை போல் பலவும் அடங்கியுள்ள
என் வீடு
இனி எனதல்ல
என் தாய் வீடு..
ஆயினும் மழைக் காலத்து காளான்களாய்
அங்கங்கே முளைத்து விட்டுருக்கின்றன
நான் இங்கே வாழ்ந்ததற்கான
என் அடையாளங்கள்..

8 comments:
:))))))))
Adayaalangal ,kalvettugal pol ,endrum maraya !!
TC
CU
//ஒய்யாரமாய் நடுகூடத்தில்
காற்றோடு நடனமாடும்
அழகிய ஊஞ்சலும்,
இன்னும்
அதிகாலை பூபாளமாய்
குருவியின் செல்ல கூச்சலும்,//
வார்த்தைகள் உணர்வைப் பிரதிபலிக்கின்றன. அப்புறம் என்ன ஒண்ணுமே காணோமே?? :((((( ரொம்ப பிசியோ???
nice one- after a long time am at your blog page
know what? you are getting better and better with each post...this one is truly awesome! truly awesome!!!
நல்லாயிருக்கு
வாழ்த்துக்கள்
மழைக்காலத்துக் காளானாய் அல்ல, மாறாத நிலைப்படியாய் எப்போதும் நிலைத்திருக்கும்.
கவிதை மிகவும் அழகாயிருக்கிறது.
en adiayalangal....unmaiyaga unga kavithai gnanathin adaiyalam.
Post a Comment