
மாபெரும் ரகசியமாய்
விரவிக்கிடந்த கடலின்
கரை அமர்ந்து தவங்கிடந்தேன்
புதிர் உடையும் நேரத்திற்காய்..
கடலுக்காய் கரையிடம்
தூது வந்த அலை
விஷமச் சிரிப்போடு
கால்களை உரசியபடி சொன்னது
பலநூறு யுகங்களாய்
சொல்லத்துடிக்கிற சேதி ஒன்றை..
கால்களே செவிகளாக
மூளைக்கெட்டிய ரகசியத்தை
மனதோடு பூட்டி வைத்தேன்
உன்னிடம் உடைக்க..
எளிதில் கரையாத
அந்த இரவில்
அலை நுரையெல்லாம்
அள்ளியெடுத்து செதுக்கி வைத்தேன்
நம் முழுநிலவை..
துணைக்காய் விதைத்து வைத்தேன்
சில விண்மீன்கள்
ஆழத்து முத்துக்களை
முழுகியெடுத்து..
சிரத்தையாய்
நான் படைத்த உலகத்தில்
ஒரே உயிராய் நான்
சாட்சியாய் இந்த சமுத்திரம்
தோழியாய் கடலலை,
அவள் ரகசியம் எனக்குமாய்
என் ரகசியம் அவளுக்குமாய்..
விடியத்துவங்கும் வினாடிகளில்
வந்ததோர் சேதி
வினாடிப்பொழுது
கண்ணயர்ந்த நேரத்தில்
நீ வந்து சென்றதாய்...
விட்டுவிட்டேனடி என பதைத்த
நேரத்தில் அலைத்தோழி கால்களை
உரசியபடி கொண்டு சேர்த்தாள்
சில நல்முத்துக்கள்..
ஏந்திய கைகளில் பளப்பளத்தன
உன் விழிநீர்த்துளிகள்..
புதிர் உடைந்த இன்பத்தில்
அமைதியாய் ஆர்ப்பரித்தது கடல்..
விரவிக்கிடந்த கடலின்
கரை அமர்ந்து தவங்கிடந்தேன்
புதிர் உடையும் நேரத்திற்காய்..
கடலுக்காய் கரையிடம்
தூது வந்த அலை
விஷமச் சிரிப்போடு
கால்களை உரசியபடி சொன்னது
பலநூறு யுகங்களாய்
சொல்லத்துடிக்கிற சேதி ஒன்றை..
கால்களே செவிகளாக
மூளைக்கெட்டிய ரகசியத்தை
மனதோடு பூட்டி வைத்தேன்
உன்னிடம் உடைக்க..
எளிதில் கரையாத
அந்த இரவில்
அலை நுரையெல்லாம்
அள்ளியெடுத்து செதுக்கி வைத்தேன்
நம் முழுநிலவை..
துணைக்காய் விதைத்து வைத்தேன்
சில விண்மீன்கள்
ஆழத்து முத்துக்களை
முழுகியெடுத்து..
சிரத்தையாய்
நான் படைத்த உலகத்தில்
ஒரே உயிராய் நான்
சாட்சியாய் இந்த சமுத்திரம்
தோழியாய் கடலலை,
அவள் ரகசியம் எனக்குமாய்
என் ரகசியம் அவளுக்குமாய்..
விடியத்துவங்கும் வினாடிகளில்
வந்ததோர் சேதி
வினாடிப்பொழுது
கண்ணயர்ந்த நேரத்தில்
நீ வந்து சென்றதாய்...
விட்டுவிட்டேனடி என பதைத்த
நேரத்தில் அலைத்தோழி கால்களை
உரசியபடி கொண்டு சேர்த்தாள்
சில நல்முத்துக்கள்..
ஏந்திய கைகளில் பளப்பளத்தன
உன் விழிநீர்த்துளிகள்..
புதிர் உடைந்த இன்பத்தில்
அமைதியாய் ஆர்ப்பரித்தது கடல்..
