
கண்ணோடு கண் சேரவில்லை;
கனவுகள் நாம் காணவில்லை;
யாருமற்ற வெளிகளில்,
நீயும் நானும்,
எல்லாமாக திரியவில்லை.
கைத்தலம் பற்றி,
காதலாகி,
கசிந்துருகி,
நீ,
என்றும் சொன்னதில்லை,
உன் நேசத்தை.
எனினும்,
நான் நிதமும் கண்டுக்கொள்கிறேனடா,
இமைகள் தடுத்தும் இயலாமல்
உன் விழியோரம் கசியும்
எனக்கான
காதல் துளிகளை.

