
விண்மீன்களை எண்ணத் துவங்கினேன்,
வண்ணத்துப் பூச்சிகளை வியக்க துவங்கினேன்.
மழைச் சாரலில் நனையத் துவங்கினேன்,
மனதினுள்ளே பேசத் துவங்கினேன்.
(நீ)சொன்னதை செய்யத் துவங்கினேன்,
செய்தவுடன் சொல்லத் தயங்கினேன்.
காலைகளைத் துரத்த துவங்கினேன்,
இரவுகளை அழைக்கத் துவங்கினேன்.
தூக்கத்தை விற்கத் துவங்கினேன்,
கனவுகளை வாங்கத் துவங்கினேன்.
துவங்கியதை நிறுத்த தயங்கினேன்,
தயங்கியதை செய்யத் துவங்கினேன்.
என்னிலிருந்து என்னை துரத்த துவங்கினேன்,
உன்னை என்னுள் அழைக்கத் துவங்கினேன்.
துவக்கத்திற்கெல்லாம் முடிவில்லாமல் போனால் என்ன?
என நினைக்கத் துவங்கினேன்,
உன்னை நேசிக்கத் துவங்கினேன்.

